சேரன் | மாந்தை
நன்னாடன்
பாடல் 6
புன்னாகச் சோலை புனல்தெங்கு சூழ்மாந்தை
நன்னாகம் நின்றலரும் நன்னாடன் – என்னாகம்
கங்குல் ஒருநாள் கனவினுள் தைவந்தான்
என்கொல் இவரறிந்த வாறு? – 6
மாந்தை நன்னாடனாகிய சேரன் ஒருநாள் இரவுக்
கனாவில் என் மார்பகத்தைத் தடவிக்கொடுத்தான். இது இவர்களுக்கு எங்கே தெரியப்போகிறது?
கண்டபடி பேசுகிறார்களே!

No comments:
Post a Comment