Pages

Friday, 25 December 2015

முத்தொள்ளாயிரம் Muttollayiram 28

சோழன் | கோழிக் கோமான்
பாடல் 28

குதலைப் பருவத்தே கோழிக்கோ மானை
வதுவை யெருகென்றால் அன்னை – அதுபோய்
விளைந்தவா இன்று வியன்கானல் வெண்தேர்த்
துலங்குநீர் மாமருட்டி அற்று. – 28

கோழிக் கோமானை உனக்கு மணம் முடித்து வைக்கிறேன் (எருக்குகிறேன்) என்று மழலை மொழி பேசும் பருவத்திலேயே தாய் மகளுக்குச் சொல்லிவைத்தாள். அது இன்று பருவப் பெண்ணுக்கு மானைக் கானல்நீர் ஏமாற்றுவது போல் ஏமாற வைத்திருக்கிறது.
நீரைப் போல் தோன்றும் வெண்தேர் | கானல் நீர் 


No comments:

Post a Comment