கடுங்காற்று மழைகாட்டும் கடுநட்புப் பகைகாட்டும் – என்று காளமேகப் புலவர் பாடிய வெண்பா.
பாடல்
நீரே பிறவா நெறிகாட்டி யாரெமக்கு
நீரே சமுசைநிலை யிட்டீர் – நீரேயிவ்
விங்களமேன் செய்தீர் விடுங்கடுங்காற் றும்மழைகாட்
டுங்கடுநட் புப்பகைகாட் டும். (36)
நீரே, பிறவா நெறி காட்டியார் | எமக்கு
நீரே சமுசைநிலை இட்டீர் | நீரே இவ் விங்களம் ஏன் செய்தீர் | விடும் கடும் காற்று உம் மழைகாட்டும் | கடு நட்புப் பகை காட்டும்.
இறைவா! எமக்குப்
பிறவா-நெறி காட்டியவரும் நீரே. சொல்வன்மையை எனக்குத் தந்தவரும் நீரே. பலரும்
பலவாறெல்லாம் பாடும்படி என்னைக் கேட்டுத் தொந்தரவு (விகளங்கள்) செய்பவரும் நீரே. கடுமையான
புயல்காற்று மழையைத் தரும் என்பதையும், நெருங்கிய நட்பானது பகைமையைத் தரும் என்பதையும்
உன் உறவிலிருந்து தெரிந்துகொண்டேன்.
![]() |
| கடுமையான காற்று மழையைக் கொட்டுகிறது அதுபோல, இறைவனிடமுள்ள கடுமையான நெருங்கிய நட்பு சோதனைக்கு உள்ளாக்கும் |

No comments:
Post a Comment