Pages

Sunday, 29 November 2015

கடுங்காற்று கடுநட்பு | காளமேகப்புலவர் KalamekapPulavar

கடுங்காற்று மழைகாட்டும் கடுநட்புப் பகைகாட்டும் – என்று காளமேகப் புலவர் பாடிய வெண்பா.

பாடல்

நீரே பிறவா நெறிகாட்டி யாரெமக்கு
நீரே சமுசைநிலை யிட்டீர்நீரேயிவ்
விங்களமேன் செய்தீர் விடுங்கடுங்காற் றும்மழைகாட்
டுங்கடுநட் புப்பகைகாட் டும். (36)

நீரே, பிறவா நெறி காட்டியார் | எமக்கு நீரே சமுசைநிலை இட்டீர் | நீரே இவ் விங்களம் ஏன் செய்தீர்  | விடும் கடும் காற்று உம் மழைகாட்டும் | கடு நட்புப் பகை காட்டும்.

இறைவா! எமக்குப் பிறவா-நெறி காட்டியவரும் நீரே. சொல்வன்மையை எனக்குத் தந்தவரும் நீரே. பலரும் பலவாறெல்லாம் பாடும்படி என்னைக் கேட்டுத் தொந்தரவு (விகளங்கள்) செய்பவரும் நீரே. கடுமையான புயல்காற்று மழையைத் தரும் என்பதையும், நெருங்கிய நட்பானது பகைமையைத் தரும் என்பதையும் உன் உறவிலிருந்து தெரிந்துகொண்டேன்.
கடுமையான காற்று மழையைக் கொட்டுகிறது
அதுபோல,
இறைவனிடமுள்ள கடுமையான நெருங்கிய நட்பு சோதனைக்கு உள்ளாக்கும்


No comments:

Post a Comment