Pages

Thursday, 24 December 2015

முத்தொள்ளாயிரம் Muttollayiram 25

சேரன் | மாந்தை நாடன்
பாடல் 25

புன்னாகச் சோலை புகழ்தெங்கு சூழ்மாந்தை
நன்னாகம் நின்றலரும் நன்நாடன் – என்னாகம்
கங்குல் ஒருநாள் கனவினுள் தைவந்தான்
என்கொல் இவர்அறிந்த ஆறு.  - 25

புன்னாகம், நன்னாகம், தென்னை ஆகிய மரங்கள் சூழ்ந்துள்ள மாந்தை நகரத்தைத் தலைநகராகக் கொண்ட நாட்டை உடையவன். சேரன். அவன் ஒருநாள் என் கனவில் வந்தான். என் மார்பகத்தைத் தடவிக்கொடுத்தான். இது இவர்களுக்கு எங்கே தெரியப்போகிறது? என்னையும் அவனையும் சேர்த்து ஏதேதோ பேசிக்கொள்கிறார்கள். – இப்படித் தலைவி ஒருத்தி கூறுகிளாள்.
நாகம் ஒருவகை மரம் | இது நாகம்பூ


No comments:

Post a Comment