Pages

Sunday, 27 December 2015

முத்தொள்ளாயிரம் Muttollayiram 31

சோழன் | செம்பியன்
பாடல் 31

அலங்குதார்ச் செம்பியன் ஆயெழில்தோள் நோக்கி
விலங்கியான் வேண்டா வெனினும் – நலந்தொலைந்து
பீர்மைற் கொளல்உற்ற பேதையர்க் கென்வாய்ச்சொல்
நீர்மே லெழுந்த நெருப்பு. – 31

செம்பியனின் அசைந்தாடும் மாலை பூண்ட தோளை நோக்கினேன். நான் விரும்பவில்லை. விலகிவிட்டேன். என்றாலும் என் மேனியின் நல்லழகெல்லாம் தொலைந்து விட்டது. பீர்க்கம்பூ நிறத்தில் பசலை-நோய் பட்டுக் கிடக்கிறது. இதனைப் பார்த்த பேதைப் பெண்கள் நீரின் மேல் நெருப்பு எரிகிறது என்கின்றனர்.

என் நல்லழகு நீர். பசலை நிறம் நெருப்பு.  
நீர் மேல் நெருப்பு

No comments:

Post a Comment