Pages

Wednesday, 30 December 2015

முத்தொள்ளாயிரம் Muttollayiram 35

சோழன் | புகார்ப் பெருமானார்
பாடல் 35

கனவினுள் காண்கொடா கண்ணும் கலந்த
நனவினுள் முன்விலக்கு நாணும் – இனவங்கம்
பொங்கோதம் போழும் புகாஅர்ப் பெருமானார்
செங்கோல் வடுப்படுப்பச் சென்று. – 35

அவன் புகார் நகரப் பெருமான். என் கனவில் அவன் தன்னைக் காணக் கொடுக்கவில்லை. எப்போதாவது வரும்போது கண்ணில் கலந்து அவனைப் பார்க்கலாம் என்றால் என் நாணம் முன்னே வந்து நின்று தடுக்கிறது. இது அவனது செங்கோலுக்கு வடு. (குற்ற வடு) – வங்கக் கப்பல்கள் கடலலையைக் கிழித்துச் செல்லும் புகார் நகரம் அவன் இருக்கும் தலைநகரம்.
புகார் நகரத்தில் இருந்த இருகாமத்து இணை ஏரி (நூல் சிலப்பதிகாரம்)

புகார் நகரத்தில் இருந்த புத்த பீடிகை (நூல் மணிமேகலை)

மூழ்கிக் கிடக்கும் புகார்த் துறைமுகம் 


No comments:

Post a Comment